என் முன்னோர்களைப் போல நான் போர் களத்திர்க்கெல்லாம் சென்றதில்லை. ஆனால் சென்னை பட்டணத்தின் திங்கள்கிழமை இரவு 7 மணி பஸ்சில் பயணம் செய்திருக்கிறேன். கிட்ட தட்ட இரண்டுமே ஒன்று போல தான் தோன்றியது.
அந்த உலோகக் கூண்டுக்குள் அடைப்பட்டு, மிதிப்பட்டு, நசுக்கப்பட்டு மூச்சு திணறி நிற்பது நடுத்தர மனிதர்கள் தினம் தினம் சந்திக்கும் போர்களமே.
இத்தகைய போராட்டத்தின் நடுவில் ஒரு காலி சீட் கிடைப்பதென்பது தலைவர் படத்திற்கு முதல் நாள் முதல் ஷோ டிக்கெட் கிடைப்பதை விட மிக கடினமானது.
இந்த பேருந்து பயணத்தின் பேசப்படாத விதிகளை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
இடது புற இருக்கைகள் பெண்களுக்கும் வடது புறம் ஆண்களுக்கும் என ஒதுக்கப்பட்டிருக்கும்.
பெண்கள் ஆண்கள் இருக்கைகளில் அமரலாம். ஆனால் ஆண்கள் எக்காரணத்திற்க்கும் பெண்கள் இருக்கைகளில் அமர கூடாது. மீறினால் வசை வார்த்தைகள் வாரி இறைக்கப்படும்.
இந்த விதிகளை யார் உருவாக்கினார்கள்? எப்படி எல்லாருக்கும் அதை தெரிவித்தார்கள்? என்று பல நாட்கள் நான் சிந்தித்ததுண்டு. ஆனால் இறுதி வரை பதில் கிட்டவில்லை.
அந்த நாள்,
எப்போதும் போல என் ஹீரோ நிரம்பி வழிந்த அந்த பேருந்திற்குள் நுழைந்தான். நான்கு பேரிடம் மிதிப்பட்டு நசுங்கி கிசுங்கி கடைசியாக நிற்பதற்கு ஏற்ற இடத்தை கண்டுபிடித்தான். வாழ்க்கை எப்போதும் விடு அன்று கொஞ்சம் எக்ஸ்ட்ரா கடினமாக தோன்றியது.
அவனுக்கு அருகில் இருந்த இருக்கையில் இரண்டு பெண்கள் அமர்ந்திருந்தனர். அது ஆண்களின் இருக்கையாக இருந்தாலும் அந்த பேசப்படாத விதி அவனை மௌனம் காக்க செய்தது.
அந்த இரண்டு பெண்களில் ஒருவர் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி விடவே அந்த அற்புதமான “காலி சீட்” அவனுக்கு முன்பாக தோன்றியது. ஆனால் அவன் சந்தோஷம் நீண்ட நேரம் நிலைக்க வில்லை. அவன் அருகில் அழகான பெண் ஒருத்தி நின்றுக் கொண்டிருந்தாள்.
“ஒரு நல்ல ஆண் மகன் – தைரியமானவன், வலிமைமிக்கவன், போராளி, பெண்களை மதிப்பான், அவள் பலவீன பாண்டம் என்று அறிந்து அவளை பாதுகாப்பான். அப்படி பட்ட ஒரு நல்ல ஆண் மகனாய் எல்லாருக்கும் முன் மாதிரியாய் இந்த பெண்ணிற்கு இந்த காலி சீட்டை நான் விட்டு கொடுக்க வேண்டும்” அவன் மூளை ஒரு பக்கத்தில் சொற்பொழிவு நடத்தினாலும், சோர்வுற்றிருந்த அவன் உடலும் வலுவிழந்து நடுங்கிய அவன் கால்களும் அதை சிறிதும் மதிக்காமால் அந்த சீட்டை நோக்கி பாய தயாராகின.
அவன் மூளைக்கும் மனதுக்கும் இடையே மகாபாரத போரே நடந்துக்கொண்டிருக்க, என்ன செய்வதென்றே தெரியாமால் குழம்பி நின்றான் என் ஹீரோ.
நடக்கும் போரை உணர்ந்த அந்த பெண் “நீங்க உட்கார்ந்துக்கோங்க சார்” என்று புன்னகைத்தால்.
அவ்வளவு தான் அடுத்த நொடி அவனையே அறியமால் அவன் உடல் மின்னல் வேகத்தில் அந்த இருக்கையில் போய் அமர்ந்தது. “அப்பாடா” புன்னகை கலந்த பெருமூச்சு விட்டான் ஹீரோ.
அன்றிரவு இந்த உலகம் அவனுக்கு சொல்ல மறந்த ஓர் ரகசியத்தை அவன் உணர்ந்தான்.
“பெண்களால் எல்லாம் செய்ய முடியும், தன் திறமையால் உலகையே நடத்தும் சக்தி அவளுக்கு உண்டு என்று பெண்ணியத்தை பற்றி கூச்சலிடும் இதே உலகம் தான் “ஏம்பா பொம்பளைய போய் லைன் ல நிக்க விடற” என்று ரேஷன் கடைகளில் முந்தி சென்றும், “3௦% இட ஒதிக்கீடு இல்லன பெண்களால முன்னேறவே முடியாது” என்று பெண்களின் திறனை சந்தேகித்தும் வருகிறது. பேச்சுக்கும் செயலுக்கும் சம்மந்தமே இல்லமால் இருப்பதற்கு பெயர் பெண்ணியம் இல்லை.
ஆணும் பெண்ணும் சமம். பல நேரங்களில் வலிமை மிக்க ஆண் கூட சில நேரம் பலவீனன் ஆகலாம். பல நேரம் பாதுகாக்க பட வேண்டிய பெண் கூட சில நேரங்களில் சூப்பர் ஹீரோ ஆகலாம் என்று உணர்வது தான் பெண்ணியம்.
ஒருவர் குறையை இன்னொருவர் தீர்த்து ஒருவர் பாரத்தை மற்றவர் சுமக்க கற்றுக் கொள்ளும் போது தான் நம் சமுதாயம் மலர தொடங்கும்.
பகலும் இருவும்
இனிப்பும் கசப்பும்
இன்பமும் துன்பமும்
வெயிலும் பணியும்
சூரியனும் சந்திரனும்
ஆணும் பெண்ணும்
ஒன்றில்லாமல் மற்றொன்டிற்கு மதிப்பில்லை
முற்றும்
கதாசிரியரிடம் இருந்து,
என்ன நண்பர்களே, எல்லாரும் சவுக்கியமா? தடுப்பூசி எல்லாம் போட்டாச்சா? போடலனா சீக்கிரம் போய் போட்டுடுங்க 🙂
உங்க எல்லோரிடமும் இப்படி ஒரு பேருந்து கதை நிச்சயம் இருக்கும். உங்க கதைய கமெண்ட்ஸ்ல சொல்லுங்க. கேட்க ஆவலாக இருக்கிறேன்.
இது போன்ற கதைகளை படிக்க இந்த தொகுப்பு பட்டனை கிளிக் செய்யுங்க.
அடுத்த முறை சந்திப்போம்!